Monday 15 April 2013

அது என்னப்பா சிங்களப் பிராமி.?!

தமிழர்கள் தமிழை எழுதப் பயன்படுத்திய வடிவங்களில் பிராமியும் ஒன்று. அதனால் அது தமிழ் பிராமி.

அசோகன் தன் கல்வெட்டில் பிராமி வரிவடிவத்தை வைத்து தன் ஆணையை எழுதினான். அதனால் அது அசோகப் பிராமி.

வட இந்தியாவில் காணப்படுபவை எல்லாம் சேர்த்து வட பிராமி.

தென் இந்தியாவில் காணப்படுபவை எல்லாம் சேர்த்து தென் பிராமி.

இதெல்லாம் சரி. அது என்னப்பா சிங்களப் பிராமி. சிங்களத்தை பிராமி கொண்டு எழுதினாரா? இல்லை சிங்களவர் முதலில் இலங்கையில் பிராமி கல்வெட்டுகளை பொறித்தனரா?

சிங்கள அரசர்கள் என்று கருதப்படுபவர்களை கூட பிராகிருத மொழியில் தான் பிராமி கல்வெட்டுகள் குறிக்கின்றன. இது போதாது என்று "ஆனைக்கோட்டை முத்திரை" வேறு தமிழிலேயே பொறிக்கப்பட்டுளது.  மேலும் பண்டு காபயன் காலத்தில் உருகுணையை ஆண்ட பாண்டியர்கள் தான் கல்வெட்டுகளில் கூறப்படும் முதல் இலங்கையின் மன்னர்கள் ஆவார்கள். (எனக்குத் தெரிந்து.)

1. ஈழத்தின் முற்காலக் கல்வெட்டின் மொழியும் சிஙகளம் இல்லை.
2. ஈழத்தின் முற்கால முத்திரையின் மொழியும் சிங்களம் இல்லை.
3. ஈழத்தின் முற்காலக் கல்வெட்டுகளை முதலில்  பொறித்த அரசர்களும் சிங்களவர் இல்லை.
4. சிங்கள அரசர்களை குறிப்பிடும் முற்காலக் கல்வெட்டுகளும் பிராகிருத மொழியே அன்றி சிங்களம் இல்லை.


பின்னர் என்ன .....  சிங்களப் பிராமி?

இதை இப்படியே விட்டால் சிங்களப்பிராமியில் பிராமி உள்ளது. அதனால் இந்தியா முழுவதும் மொழி ஏற்பட சிங்களமே காரணம். அதனால் சிங்களவர் இந்தியர்களுக்கு எல்லாம் தாய். அதனால் இந்தியா சிங்களவரை ஆதரித்தே தீர வேண்டும் என்று சிங்கள பேரினவாதிகளும் தூதுவர்களும் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி விடப்போகிறார்கள் ஜாக்கிரதை.

No comments:

Post a Comment