Monday 12 October 2015

கொரியாவின் காயா அரசை தோற்றுவித்த தமிழ் இளவரசி

கொரியாவின் காயா அரசை தோற்றுவித்த சுரோ என்ற இளவரசரின் துணைவியாள் இயோ எனப் பெயர் பெற்ற ~ஆய்நாட்டு இளவரசியாக கொரிய கதைகளில் குறிக்கப்படுகிறாள். இவளின் கூட்டம் காரா எனப்படும் கூட்டம். இவளின் சின்னம் இரட்டை மீன் சின்னம்.

இதை ஆராய்ந்த வடநாட்டு ஆய்வாளர்கள் இந்த கொரிய இளவரசி உத்திரப்பிரதேச அயோத்தியாவைச் சேர்ந்தவர் எனக் கதை அளந்து வருகின்றனர். அதுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தின் """தற்போதையச்""" சின்னமும் இரட்டை மீனாம். அயோத்தியா பெயர் ~ஆய்என்னும் பெயருடன் ஒத்து வருகிறதாம். அதனால் இவள் அயோத்தியாக்காரியாம். ஆனால் அம்மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டுகளடையது என்பதை வடநாட்டார் மறைத்துவிட்டனர்.

ஆனால் நம்ம பாண்டிய நாடு 2600 ஆண்டுகள் முன்பிருந்தே மீன் சின்னத்தை பொறித்ததற்கு ஏராளமான காசுகள் உள்ளன. அதிலும் பாண்டியர் கீழிருந்த பரவர்கள் கொரியாவில் உள்ளது போலவே இரட்டை மீனைப் பொறித்துக்கொண்டனர். மதுரைப் பாண்டியர் சங்ககாலத்தில் ஒரு மீனைப் பொறித்தாலும்  கொற்கைப் பாண்டியர் இரண்டு மீன்களைப் பொறித்தனர்அதனால் பாண்டிய நாட்டின் கீழிருந்த முதலாம் நூற்றாண்டு ஆய் நாட்டு பரவர்களே இரட்டை மீன் சின்னங்களை கொரியாவிற்கு கொண்டு போயிருக்க வேண்டும்.

ஏற்கனவே இது தொடர்பாக கடலியல் ஆய்வாளர் @Orissa Balu மும்முரமாக ஆய்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக என் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் ஈழத்தில் பரதவர்கள் வெளியிட்ட காசு ஒன்றில் கொரியாவில் உள்ளது போல் இரட்டை மீன்கள் இருக்கும் சங்ககாலக் காசு ஒன்றை காட்டியுள்ளேன். கொற்கை செழியன் வெளியிட்ட இரண்டு மீன்கள் கொண்ட காசையும் காட்டியுள்ளேன். ஆனால் இது கொரிய மீன் சின்னத்தில் இருந்து வேறுபட்டது. அதே சமயம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தை குறிக்கும் தொலெமி ஆயர்களுக்கு கீழே தென்பாண்டி நாடு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆக ஆய் நாட்டைச் சேர்ந்த பரதவர்களே கொரியாவில் இச்சின்னத்தை கொண்டு போயிருக்க வேண்டும். காரணம் கொரியாவின் தமிழ் இளவரசியின் மரபு காரா என்னும் கூட்டத்தைச் சேர்ந்தது. ~ஆய்என்னும் நாட்டைச் சேர்ந்த மரபாக இது கொரிய இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. அந்த காரா என்னும் பெயரில் தென் தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் கரையார் என்பவர்களே குறிப்பிடுகின்றனர். பாலியில் இவர்களை காரவா என்பர். இந்த காராக் கூட்டத்தை கொரியாவில் காயா என்றும் அழைப்பர். இதுவும் கூட காயல் என்னும் பெயரைக் குறிப்பதாக கொள்ளலாம். 

ஆக கொரியாவின் இளவரசி தமிழச்சியே தவிர உத்திர பிரதேசத்தவள் அல்ல.
இது தொடர்பான என் ஆய்வுக்கட்டுரை நவம்பர் 6 2015 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வரங்கில் வெளியாகாவிட்டால் முகநூலில் கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வெளியிடப்படும்.
நம்ம ஆய்நாட்டு பரவர்களின் சின்னமான இரட்டை மீன்களை தான் ஆய்நாட்டுக்காரி எனக் காட்ட கொரியாவின் தமிழ் இளவரசி இரட்டை மீன்களை பொறித்துக் கொண்டாள். ஆனா இந்த வடநாட்டுக்காரங்க எழுதுனது என்னன்னா "உத்திரப் பிரதேச அரசு சின்னத்தில் இரு மீன்களும் வில்லும் இருப்பதால் அந்த கொரிய இளவரசி உத்திர பிரதேச அயோத்தியோ நாட்டுக்காரி" என்றுஅந்த உத்திரப் பிரதேச சின்னம் எப்போது இருந்து பொறிக்கப்பட்டதுன்னு ஏதாவது வரலாறு தெரியுமா
அந்த உத்திர பிரதேச மீன் சின்னம் நவாப்களுடையது. அதுவும் 19ஆம் நூற்றாண்டு. நவாப் அறிமுகப்படுத்திய போது அச்சின்னம் கீழுள்ள இணைப்பில் உள்ளது போல் இருந்தது.
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/46/%E0%A4%85%E0%A4%B5%E0%A4%A7_%E0%A4%AE%E0%A5%8B%E0%A4%B9%E0%A4%B0.jpg
டைம்சு ஆஃப் இந்தியாவில் உத்திர பிரதேச மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டில் தான் வந்தது எனக் காட்டும் கட்டுரை இணைப்பு கீழே.
http://timesofindia.indiatimes.com/city/lucknow/The-emblem-story/articleshow/201009.cms
LUCKNOW: The state emblem of Uttar Pradesh owes its origin to the Royal Society in the United Kingdom, which approved the symbol in 1916. The 'Coat of Arms' adorning all UP government files, letterheads and vehicles and other government stationery, including its publications using it as seal, has an underlined idea.
Unveiling this quite an unknown idea first suggested by Mr Baker, assistant director of UP state archives, Dr Sandhya Nagar, says the combination of a "pair of fish" and the arrow-bow, embellished with three waves stresses on 'Unity in diversity'.
Dr Nagar said the symbolism attached with each of these characters marked their presence in the logo, the pair of fish with the Muslim rulers of Oudh while the bow and arrow identifying Hindu Lord Ram while the waves marked the confluence of the rivers Ganga-Yamuna.
The proposed logo also contained a star at the bottom, which was deleted later. "The symbol is a vivid representation of geographical, historical and cultural integrity of Uttar Pradesh," Dr Nagar said.
The UP state archives boasts of possession of the documents which fortified the requests made by the then national leaders, especially Govind Ballabh Pant, for implementation of the state symbol.
The documents also show the resistance on the part of the then state offices, especially Sir Harry Graham Haig, the governor of the state, to enforce the emblem which had already seen a green signal from the Royal Commission. Dr Nagar said the proposal had gone across "several oppositions and a few changes before implemented on August 9, 1938. It was with the efforts of an adamant Pant that the state owns the emblem with pride".


No comments:

Post a Comment